Friday, May 15, 2015

ஆஸ்திரேலியாவில் தீப்பிடிப்பு சம்பவங்கள்

நான் சிறு பையனாக இருக்கும்போது எங்க ஊரில் பல வீடுகள் கூரை வீடுகள்தான் (எங்க வீடு உட்பட) .  அப்போது ஊரில் எங்காவது அவ்வப்போது வீடு தீக்கிரையாகும் துயர சம்பவம் நடக்கும். அப்படிப்பட்ட  கொடூர சம்பவத்தில் சிக்கிய மக்கள் அனைத்து உடைமைகளும் கணநேரத்தில் இழந்துவிடும் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். கிட்டதட்ட இறந்தவீட்டுக்கு செல்வது போல் ஊர் மக்கள் துக்கம் விசாரிப்பர். அப்படிபட்ட அனுபவங்களால் எனக்கு தீச்சம்பவங்கள் மிகுந்த வேதனையை கொடுக்கக் கூடியது.  தற்போது ஊரில் பெரும்பாலானோரின் வீடுகள் அவரவர் வசதிக்கேற்ப தீப்பிடிக்காத கான்ங்கிரீட்  வீடுகளாக உருமாறியிருப்பது நல்ல விசயம்

ஆனால் இங்கு ஆஸ்திரேலியாவில் அடிக்கடி தீப்பிடிப்பு சம்பவங்களை பார்க்க வேதனையாக உள்ளது.  அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை, ஒருவேளை இங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தினால் கட்டப்பட்டிருபதாகக் கூட இருக்கலாம்.

நேற்றும் இங்கு பிரிஸ்பேனில் ஒரு வீடு தீப்பிடித்ததில் ஒரு 2 வயது குழந்தை தன் பிறந்த நாள் அன்றே இறந்த துக்க செய்தி இங்கே...

http://www.news.com.au/national/father-tried-to-save-son-2-from-birthday-blaze-at-beenleigh/story-e6frfkp9-1227355675832

No comments:

Post a Comment