Sunday, June 7, 2015

ஆஸ்திரேலிய தமிழ் அமைப்புகளிடம் நிலவும் Proxy வாக்குகள் என்ற நச்சுக் கலாச்சாரம்.


ஆஸ்திரேலியாவில் கடந்த 5 வருடத்தில் சில தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி அனுபவத்தில் நான் பார்த்த ஒரு நச்சுக் கலாச்சாரம் இந்த புராக்சி வாக்குகள் என்ற விசயம்.

proxy வாக்கு என்றால் என்ன ?
ஒரு அமைப்பில் உறுப்பிணராக உள்ளவர் ஆண்டு கூட்டத்திற்கு வரமுடியாமல் போனால் அவர் வாக்கை இன்னொருவர் செலுத்த அனுமதியளிக்கும் ஒரு படிவம். இதை மேலோட்டமாக பார்த்தால் ஒரு நல்ல விசயமாகவே படும். அதற்காகத் தான் அரசாங்கம் இதை அனுமதித்திருக்கிறது என்று நம்புகிறேன்.

ஆனால் இதை எவ்வாறு தவறாக நம் அமைப்புகள் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.

ஒரு அமைப்பில் 40 உறுப்பினர்கள் உள்ளார்கள் என்று வைத்துக்கொள்வோம். 40ல் சுமார் 20 உறுப்பினர்கள்தான் ஆர்வமுள்ளவர்களாக இருந்து கண்டிப்பாக கூட்டத்திற்கு வருவார் என்ற நிலையிருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவர் தலைவராக வேண்டும் என்று நினைக்கிறார் என்று வைத்ததுக்கொள்வோம். அவருக்குத் தேவை 20+ வாக்குகள்.
தலைவராக ஆசைப்படும் நபர் வரமாட்டார்கள் என்று நினைக்கும் 20+ நபர்களிடம் புராக்சி படிவங்களை வாங்கிக் கொண்டு வர முடியும். மேலும் விபரமானவராக இருந்தால் அமைப்பில் எந்த பங்கும் எடுக்க விரும்பாத சிலரிடம் பேசி,
சந்தா பணத்தை மட்டும் செலுத்துங்கள் நீங்கள் கூட்டத்திற்கே வரதேவையில்லை என்று கூறி இன்னும் 10 உறுப்பினர்களை பெயரளவில் சேர்க்க முடியும். புதியதாக சேர்க்கப்பட்டவர்களிடமும் 10 proxy படிவங்களை பெற்று வர முடியும்.
இப்படி தேர்தல் வேலைகளை செவ்வனே முடித்து, ஆண்டுக் கூட்டம் நடைபெறும் தினத்தன்று 30 proxy படிவங்களுடன் வெற்றி நிச்சயம் என்று தலைவராக ஆசைப்படுபவர் கூட்டத்திற்கு வருவார்.
தங்கள் நேரத்தினை செலவு செய்து வரும் உண்மையான சங்கத்தின் மேல் ஆர்வமுள்ளவர்களும் ஒரு 20 பேர் கூட்டத்திற்கு வந்திருப்பார்கள்.
கூட்டத்திற்கு வந்த அனைவரும் தலைவராக இருப்பவர்க்கு எதிராக எதிராக வாக்களித்தாலும், தலைவர் 30 proxy வாக்குகளை வைத்து "மாபெரும் வெற்றி" பெற்றுவிடுவார்.
கூட்டத்திற்கு வந்த ஆர்வலர்கள் 20 பேரும் வெறுப்படைந்து அமைப்பில் பணியாற்றுவதை நிறுத்திவிடுவர்.
அடுத்த வருடமும் இந்த போட்டி நடக்கும். இந்த முறை வேறு ஒரு "தலைவர்" proxy vote தேர்தலுக்கு பல நாள் முன்பிருந்தே வேட்டையில் இறங்குவார்.
இதுதான் இங்கு பல தமிழ் அமைப்புகளில் தொடர் கதையாக தமிழ் அமைப்புகளில் நடக்கிறது. நல்ல மனிதர்களை தமிழ் அமைப்புகள் இப்படித்தான் இழக்கின்றன.
இனி யாராவது ஒரு அமைப்பு தேர்தலில் ஜெயித்தேன் என்று சொன்னால், எத்தனை புராக்சி வோட்டு, எத்தனை உண்மையான ஓட்டு வாங்கினீங்க என்று தைரியமாக கேளுங்கள்.

தமிழ் அமைப்புகள் மக்களாட்சி தத்துவத்தை உண்மையாக மதித்து நடக்கவேண்டும் என்று நினைத்தால் இந்த proxy voting முறையை தங்கள் யாப்பிலிருந்து(constitution) உடனே நீக்கவேண்டும். அல்லது குடும்ப உறுப்பிணர்களுக்கு (கணவன் அல்லது மனைவி) மட்டும் proxy வாக்கை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்பது என் கருத்து.

இந்த சம்மந்தமாக உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.

No comments:

Post a Comment